டெல்லி: பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதல்வராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். எம்ஜிஆர் பிறந்தநாளில், அவருக்கு தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டு உள்ளார்.