புதுடெல்லி:

ன்று மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி.

 

ரேடியோ வாயிலாக பிரதமரின் ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மான்கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். அவர்களிடம் பல்வேறு கருத்துகளை கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை மான் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளார். இன்று நடக்க உள்ள நிகழ்ச்சி 71-வது மான் கி பாத் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.