டில்லி:

பிரதமர் மோடி நாளை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செல்கிறார்.

இந்த பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேசவுள்ளனர்.

இந்த பயணம் குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ரஷ்ய மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதிபர் புடினை சந்திக்க நாளை சோச்சி நகருக்கு பயணம் செய்கிறேன்.

அவரை சந்திப்பதில் மகிழ்ச்சி. இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேலும் வலுப்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தள்ளார்,