டெல்லி: நாட்டை பாதுகாக்கும் நமது வீரர்களுக்காக தீபாவளியன்று விளக்கேற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நமது நாட்டை பாதுகாக்க தைரியத்துடன் போராடும் ராணுவ வீரர்களுக்காக, தீபாவளி தினத்தில் விளக்கேற்றுவோம்.

நமது ராணுவ வீரர்களின் தைரியத்திற்கு, நன்றி கூறுவது வார்த்தைகளால் மட்டும் முடியாது. நாட்டின் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.