டில்லி

பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை ஆற்றினார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரையாற்றி உள்ளார்.

அந்த உரையின் முழு விவரம் பின் வருமாறு

“நான் மீண்டும் கொரோனா தொற்று குறித்து உங்களிடம் பேச வந்துள்ளேன்.

ஒவ்வொரு இந்திய மக்களும் இணைந்து ஊரடங்கை வெற்றிகரமானதாக்கினீர்கள்.

குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த முயற்சிகள் அனைத்தும் இருந்தும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் மட்டும்தான்.

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க இதைத் தவிர வேறு வழியில்லை

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தனித்திருக்க வேண்டும் எனத் தவறாக நினைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும் தனித்திருத்தலை கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று ஒரு முக்கிய முடிவை எடுக்கப் போகிறேன். இன்று இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும், லாக் டவுன் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும், மாவட்டமும் முடக்கப்படுகிறது.

இது மக்கள் ஊரடங்கைக் காட்டிலும் வலுவானது.

உங்களிடம் கை கூப்பி வேண்டிக்கொள்கிறேன் தற்போது நீங்கள் நாட்டில் எங்கு உள்ளீர்களோ அங்கேயே இருங்கள். இது 21 நாட்களுக்குத் தொடரும்.

21 நாட்களுக்கு வீட்டை விட்டு எங்கேயும் செல்லாதீர்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனாவை உங்கள் வீட்டுக்கு அழைத்து வரலாம்.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

67 நாட்களில் ஒரு லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த 11 நாட்களில் அது இரண்டு லட்சம் ஆனது. அடுத்த நான்கு நாளில் மூன்று லட்சத்தைத் தொட்டது.

இந்த கொரோனா தொற்றைத் தடுப்பது மிகவும் கடினமானது.

இந்த 21 நாட்களை நாம் சமாளிக்கவில்லை என்றால் 21 ஆண்டுகள் நாம் பின் தள்ளப்படுவோம்.
ஊரடங்கு நேரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்.

இந்த சமயத்தில்தான் நமது நடவடிக்கைகள் தான் இந்த கொரோனா தொற்றைத் தடுக்கும்.

வீட்டிலேயே இருங்கள் இந்த கொரோனா தொற்றுக்காக பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் குறித்துச் சிந்தியுங்கள்.

இந்த கொரோனா தொற்றைச் சமாளிக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்டோர் நமக்காக பணியாற்றுகின்றனர்.

ஊடகவியாளர்கள் குறித்தும் நீங்கள் யோசிக்க வேண்டும் உங்களுக்குச் சரியான தகவல்களைத் தர அவர்கள் பணிபுரிகின்றனர்.

போலீஸார் குறித்து யோசியுங்கள் உங்களைக் காப்பாற்ற அவர்கள் 24 மணி நேரமும் பணி செய்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுவாக்க 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சமயம் சுகாதார சேவைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்”

என உரையாற்றி உள்ளார்.