பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ” எனது சகோதர, சகோதரர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் “ என மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.

modi

தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாளை பொங்கள் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையன்று, சூரியனுக்கும், இயக்கைக்கும், ஏர் உழும் மாட்டிற்கும் விவசாயிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழாவை இலங்கை, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

pongal

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் டிவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், “ பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணா்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிராா்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என்று தமிழில் குறிப்பிட்டுள்ளாா்.