மும்பை: எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறைவைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் வரவரா ராவ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
அவர் நவி மும்பையின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாக, அவரின் உல்நிலை கடந்த மே மாதம் மோசமானதைத் தொடர்ந்து, அவர் சிறையிலிருந்து, மும்பையின் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அப்போதிருந்தே, அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அவரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையிலேயே, அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று குற்றம் சுமத்துகின்றனர் அவரின் குடும்பத்தினர்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதானது, அவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக, சஃபூரா ஸர்கார் மற்றும் வரவரா ராவ் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு, மொத்தம் 375 பிரபலங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.