வார்சா: போலந்து நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளை இன்னமும் பாதித்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந் நிலையில் போலந்து நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது. அந்நாட்டில் 24 மணிநேரத்தில் புதியதாக 11,953 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டு மொத்தமாக 11,71,854 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு மேலும் 431 பேர் பலியாக, மொத்த பலி எண்ணிக்கை 24,345 ஆக அதிகரித்து உள்ளது.