லண்டன்

லண்டன் பக்கிங்க்ஹாம் அரண்மனைக்கு கத்தியுடன் வந்த ஒருவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்னும் ஐயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லூடன் பகுதியச் சேர்ந்த மோகிச்சுனாத் சட்டர்ஜி (வயது 26) என்பவர் லண்டன் அரண்மனையில் சட்டமன்ற கட்டிடத்தில் சந்தேகப் படும்படி நடமாடி உள்ளார்.  அவர் ஏதோ தீவிரவாதச் செயல் புரிய வந்திருக்கக் கூடும் என்னும் ஐயத்தில் அவரை போலீசார் அணுகினர்.  அவர்களிடமிருந்து தப்பி தனது காரில் ஏறி வேகமாக சென்றவரை போலீசார் தடுத்துள்ளனர். காரை நிறுத்தாமல் சட்டர்ஜி அவர்கள் மேல் மோதி உள்ளார். அதில் மூன்று போலீசார் காயமுற்றனர்.

பிறகு அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் நான்கு அடி நீளமுள்ள வாள் ஒன்றை கைப்பற்றி உள்ளனர்.  அவரை வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.