சென்னை:
நாளை நடைபெற இருந்த பா.ம.க.வின் மவுன விரதம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ந்தேதி (நாளை) மவுன விரதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் காந்தியடிகளின் பிறந்த நாளான நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை சென்னை மெரீனா காந்தி சிலை அருகில் மவுன விரதம் நடைபெறும்.
இதில் டாக்டர் ராமதாஸ், குமரி அனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து விட்டதால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.