சென்னை:

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் தணிந்தாலும் மக்களிடையே சோகம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இன்று துணைமுதல்வர் ஓபிஎஸ், தூத்துக்குடி பயணம் செய்து, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த வர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். அதைத்தொடர்ந்து நாளை தமிழக கவர்னர் பன்வாரிலாலும் அந்த பகுதி மக்களை சந்திக்க தூத்துக்குடி விரைகிறார்.

அப்போது   துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் நலம் விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களையும் ஆய்வு செய்ய இருப்பதாகவும், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.