டில்லி

புலனாய்வுத்துறை டில்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

தனிப் புலனாய்வுத் துறை சமீபத்தில் டில்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்றும், அது இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இதை அடுத்து டில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பரிசோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டினுள் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும் மத்திய காவல் துறையினரால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  பேருந்து நிலையங்கள், ரெயில்வே ஸ்டேஷன்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், மால்கள், மற்றும் பெரிய சினிமா அரங்குகள், விமான நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தவும்,  பாதுகாப்பு சோதனைகளை கடுமையாக்கவும் எச்சரிக்கை வந்துள்ளது.  இந்தக் காவல் அயல்நாட்டு தூதரகங்கள் மற்றும் அயல்நாட்டினர் அதிகம் கூடும் இடங்களிலும் மிகக் கடுமையாக்கப் பட்டுள்ளது

வாகன சோதனையும்,  மாநில எல்லை சோதனை சாவடிகளும் மேலும் கடுமையாக்கப் பட்டுள்ளது.   ஏதும் சந்தேகத்துக்குரிய பொருட்கள் தென்பட்டால் உடனடியாக உளவுத்துறைக்கு தகவல் அளிக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.