தூத்துக்குடி: சாத்தாக்குளம் இரட்டை மரணம் தொடர்பாக தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜரானார்.
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, போலீசார் அழைத்துச் சென்றனர்.
போலீசார் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி, வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜரானார். அவரிடம் சிபிசிஜடி போலீசார் தற்போது விசாரணை நடத்தினர். விசாரணை நீதிபதியான பாரதிதாசனை இவர் தான் ஒருமையில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.