விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் வரும் இருபதாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற சிங்கிள் ட்ராக் மட்டும் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்பாடலில், “தமிழாலே ஒண்ணானோம்…மாறாது எந்நாளும்” என்கிற வரிகள் இடம்பெற்றிருப்பது பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே படத்தின் போஸ்டரில் காளை மாடு இடம் பெற்றது.

ஆகவே ஜல்லிக்கட்டு குறித்து படத்தில் காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் “தமிழாலே ஒண்ணானோம்…மாறாது எந்நாளும்” என்ற வரிகள் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நேரத்தில், விஜய்யின் அரசியல் ஆசைகளை இப்படம் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.