சேலம்:

கூட்டணிக்காக  அரசியல் கட்சிகள் தவறான இலக்கணத்தை உருவாக்கி வருவதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்களும் , தமிழக மக்களும் எங்களுடன் இருக்கும்போது கூட்டணிக்கு அவசியமில்லை.

ஆந்திரா , கர்நாடகாவிலா தேர்தல் நடக்கிறது ? கூட்டணிக்காக கட்சிகளை ஏன் தேடவேண்டும்.

அரசியலில் எதிரிகளாக இருந்தவர்கள் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கிறார்கள். கூட்டணிக்காக நிறைய அரசியல் கட்சிகள் தவறான இலக்கணத்தை உருவாக்கி வருகிறார்கள். மக்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு அமமுக கூட்டணி அமைக்காது என்றார்.