சென்னை:

தனிக்கட்சி தொடங்குவது குறித்து எம்ஜிஆர் பிறந்த தினமான நாளை அறிவிப்பேன் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17ம் தேதி அடுத்த அரசியல் நகர்வுகள் குறித்து அறிவிப்பேன். தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் நாளை அறிவிப்பேன்.

இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அது எப்போது முடியும் என்று தெரியாது. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், தனிக்கட்சி தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ உள்ளாட்சி தேர்தலில் எங்களது அணி பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெறும். அதிமுக.வின் உண்மை தொண்டர்கள் அனைவரும் எங்கள் பின்னால் உள்ளனர். நாளை அறிவிக்கப்போகும் முக்கிய முடிவு குறித்து சசிகலாவிடம் ஆலோசனை மேற்கொண்டு விட்டேன்’’ என்றார்.