சென்னை:

தொடர்ந்து பகுத்தறிவு வாதத்தை பேசிக்கொண்டிருப்பேன் என்றும் திராவிடம் என்பது காலம்காலமாக இருப்பது. அதை அழிக்க முடியாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:


* பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன்

* அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது தகுதி.

* திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்ல முடியாது. அது என்றும் இருக்கும்.
* தற்போதைய அரசியலில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.
* தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தேர்வு செய்து கொள்ளட்டும்
* ஜெயலலிதா மரணம்குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
* எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்க வேண்டும்.
* ஜல்லிகட்டு போராட்டம் எரிமலையின் நுனி
* தவறுகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும்.
* சாதிகள் இல்லாத சமுதாயம் அமையவேண்டும்
* பணம் பெற்று வாக்களிக்கும் நிலையில் கேள்விகள் எழுப்ப முடியாது
* தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும்.

* தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காந்தி, பெரியார் போன்றவர்கள் தேர்தல் அரசயலை கடந்த ஹீரோக்கள்.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.