சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள்.

ரஜினிக்கு முன்பாகவே, அரசியலில் இருந்தவர், மோகன்பாபு. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த மோகன்பாபு, அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொஞ்சகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

“அரசியலில் இறங்கப்போவதில்லை” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில் மோகன்பாபு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் :

“ரஜினிகாந்த் நல்ல நண்பர். நல்ல மனிதர். எறும்புக்கும் தீங்கு விளைவிக்காதவர்” என கூறியுள்ளார்.

“உன்னை போன்றவர்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது. அரசியல் ஒரு சாக்கடை. அரசியல் ஒரு சகதி. அதில் விழாமல் இருந்தது நல்ல விஷயம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலில் நாம் இறங்குவதற்கு முன்பு நம்மை பாராட்டுவோர், அரசியலில் நாம் இறங்கி விட்டால் வசை பாடுவார்கள்” என தெரிவித்துள்ள மோகன்பாபு “ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காதது பாராட்டுக்குறியது” என கூறியுள்ளார்.

– பா. பாரதி