தமிழகத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள்  புகாரில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவனின் தாயார், கோவை நீதிமன்றத்தில், தனது மகனுக்கு ஜாமின் கோரி மனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

அப்போது, செய்தியாளர்கள் அவரிடம், உங்கள் பையன் என்ன பன்னியிருக்கான்னு தெரியுமா?  அதுக்குள்ள பெயிலுக்கு வந்திருக்கீங்களே என்று கேள்வி எழுப்பினர்… அதற்கு அவர் என்னங்க இப்படி பேசுறீங்க… அவன் வீடியோவே இல்ல… நீங்க எதாவது பேசுறீங்க… அதுல என்ன இருக்குன்னு தெரியுமா என்று எதிர்கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது செய்தியாளர்கள் பல பெண்களின் வாழ்வை கெடுத்துள்ளார்கள்.. அவன் நல்லவனாக இருந்திருந்தால் முன்கூட்டியே சொல்லயிருக்கலாமே… இதுகுறித்து காவல்துறையிடமோ, முக்கியமாவர்களிடையே தெரிவித்து அந்த பெண்களை காப்பாற்றி இருக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்…  அதற்கும் திருநாவுக்கரசின் தாயார் எதிர் வாக்குவாதம் செய்தார்… இதே சம்பவம் மற்ற மாநிலங்களில் நடைபெற்றிருந்தால் நடந்திருப்பதேவேறு… தமிழ்நாடு என்பதால்தான் நீங்கள் இங்கு வந்த பேசுகிறீர்கள் என்று கூறியதற்கு, இதற்கு நீங்கள் தான் காரணம் என்று எதிர்வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போது சில பொதுமக்களும், அந்த பெண்ணுக்கு எதிரான பேச… வாக்குவாதங்கள் முற்றிய நிலையில், திருநாவுக்கரசின் தாயார் அங்கிருந்து விறுவிறுவென சென்று விடுகிறார்…

அவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… இதோ அந்த வீடியோ….