சென்னை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை(ஜனவரி 11) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொங்கலுக்கான அரசு விடுமுறையுடன் ஜனவரி 13, 14ஆம் தேதியும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.