சென்னை:

மிழகம் முழுவதும் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் வரும் 7ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ரேசன் கடைகள் மூலம்  விநியோகிக்கப்படும்  என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசாக, 1 கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பை குறிப்பிட்ட கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பபட்டு வருகிறது.

இதன் காரணமாக வெள்ளைநிறை ரேசன் கார்டு மற்றும் வசதி படைத்தவர்கள் வைத்துள்ள வர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகையான ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்த பின்னர் திருவாரூர் மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் ஏழை பணக்காரர்கள் என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து ரேசன் கார்டுதார் களுக்கும் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும்,   பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொருட்கள் வாங்குகின்ற அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழக  அரசுக்கு ரூ.1,974 கோடியே 17 லட்சம் செலவாகிறது என்றும், பொங்கல் பொருட்கள் தொகுப்பிற்கு மட்டும் ரூ.257 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட் களுடன் பை ஒன்றும் வழங்கப்படும். பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பணம் அனைத்து ரேசன் கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும்.

ஒவ்வொரு அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இலவச பொங்கல் தொகுப்புக்கு தேவையான  பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யும் பணி நடைபெறுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு காகித பையில் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பொங்கல் பரிசு 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் 13-ந்தேதி வரை பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைக்கும்.

நெரிசல் இல்லாமல் வழங்கும் வகையில் ஒவ்வொரு ரே‌சன் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து ரே‌சன் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும்.