ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் , ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ படம் வருகின்ற 2020ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது படக்குழு .

இதனிடையே கார்த்தி, ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படமும் வரும் பொங்கலன்று திரையிட திட்டமிட்டு உள்ளது.

தற்போது திடீரென விஷாலின் அடுத்த படமும் வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. விஷாலின் 28 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை எம்எஸ் ஆனந்தன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.