சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் , புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.
இதில் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வெளியீட்டுக்குத் தயாராக இருந்த இப்படம் கொரோனா ஊரடங்கினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே, இந்தப் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்ததால், திரையரங்கில் வெளியாகாது என்பது தெளிவாகியது.

பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் எதிர்ப்புகளை தாண்டி தான் சூர்யா அதை அமேசான் ப்ரைமில் வெளியிடுகிறார். தற்போது வந்துள்ள ட்ரெய்லர் அதிகம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில் வரும் 29ம் தேதி பொன்மகள் வந்தாள் வெளியாகிறது.
ஊட்டியில் குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டது பற்றியது தான் இந்த படம் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே புரிகிறது. ஜோதிகாவிற்கு எதிராக வக்கீலாக நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார்.