லக்னோ:

மகாத்மா காந்நியின் உருவ பொம்மையை  துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி 30-ம் தேதி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகரை அடுத்த நவ்ரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவ பொம்மை வைக்கப்பட்டிருந்தது.

சுற்றி நின்றவர்கள் காந்திக்கு எதிராக கோஷமிட, இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார்.
சுட்டதும் படத்திலிருந்து ரத்தம் வடிவது போன்று அமைக்கப்பட்டிருந்தது.

காந்தியை சுட்டு நாதுராம் கோட்சேவின் மரணத்தை மேன்மைப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்து மகாசபையின் பெண் தலைவர் உட்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தப்பால் பகுதியில் தலைமறைவாக இருந்த இந்து மகா சபை தேசிய செயலாளர்  பூஜா ஷகுண் பாண்டேவையும் அவரது கணவர் அசோக் பாண்டேவையும் , போலீசார் இன்று காலை கைது செய்தனர்.