பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல நடிகர், நடிகைகள் பாலிவுட்டில் மேலதிகார வர்கத்தினரின் செயல்களை மறைமுகமாக வசை பாடி வருகின்றனர்.

எல்லா விஷயத்துக்கும் விமர்சனம் செய்யும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த விஷயத்தில் மௌனம் சாதித்து வருகிறார். அதற்கு நடிகை பூனம் கவுர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறும்போது. ‘தென்னிந்திய நடிகர்கள், இயக்குனர்களை விமர்சிக்கும் ராம்கோபால் வர்மா சுஷாந்த் சிங் தற்கொலை விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்?அங்குள்ள மேலதிகாரத்தினர் செய்வதுபற்றி பலரும் விமர்சிக்கின் றனர். ராம் கோபல் வர்மா மட்டும் கப்சிப் என்று இருப்பது ஏன்?’ என கேட்டிருக்கிறார் பூனம் கவுர்.