சென்னை

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டி இடுகிறார்.

 

திமுக முன்னாள் தலைவர் மு கருணாநிதி மரணம் அடைந்ததை ஒட்டி திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதை ஒட்டி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 28 ஆம் தேதி அன்று இந்த தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தற்போது திமுக வசம் இருந்த இந்த தொகுதியில் யார் போட்டி இடுவார்கள் என பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. திமுக தலைவர் மு க ஸ்டாலின், அவர் மகன் உதய நிதி மற்றும் ஸ்டாலினின் சகோதரியும், கருணாநிதியின் மகளுமான செல்வி உள்ளிட்ட பலர் பெயரும் கூறப்பட்டது.

இன்று திமுக வேட்பாளர் நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், துரைமுருகன், ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு நேர்காணல் நிகழ்த்தினர்.

 

தற்போது திருவாருர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக தீர்வு செய்யப்பட்டுள்ளார்.

பூண்டி கலைவாணன் திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் ஆசி பெற்றார்