புதுடெல்லி:
மோசமான சுகாதாரம், தண்ணீரின் தரம் குறைவாக உள்ள நாடுகளில் கொரோனா பரவல் விகிதத்தை, பணக்கார மற்றும் சிறந்த சுகாதார நிலையில் சிறந்து விளங்கும் நாடுகளை விட குறைவாகவே இருப்பதாக, இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,17,306 ஆக உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,61,312-ஆக இருக்கிறது. இது உலக அளவில் மிகவும் குறைந்த அளவாகவும், 1.5% விகிதமாக உள்ளது.

இந்த விகிதம், பீகாரில், சமூக-பொருளாதார மேம்பாட்டு காரணிகளுடன், நாட்டில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் விகிதம் 0.5%-ஆக இருந்து வருகிறது.

கொரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்கள் பட்டியலில் பீஹார் மட்டும் இடம் பெறவில்லை.  கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களும்  முறையே 0.4, 5 விகிதமாக அளவுடன் பட்டியலில்  இடம் பிடித்துள்ளது.  ஆனால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்றவை அதிகளவில் மேம்பாடு அடைந்துள்ளதுடன், 2 அல்லது அதற்கு மேலான விகிதத்துடன் உள்ளது. இந்த ஆய்வு முடிவு  புனேவில் உள்ள செல் அறிவியல் தேசிய மையம் மற்றும் சென்னை கணித நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில் ஆராய்சியாளர்கள், தண்ணீர் அளவு மற்றும் சுகாதாரம் மற்றும் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்பட பல்வேறு மேம்பாட்டு காரணிகளை மதிப்பீடு செய்தனர். இதில் அதிகளவு மக்கள் உயிரிழந்தது, சுத்தமான தண்ணீர் உள்ள நாடுகளில் என்றும்,   மோசமான சுகாதாரம் கொண்ட நாடுகளில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வு அறிக்கையில், சிறந்த சுகாதாரம், நோய்எதிர்ப்பு சக்தியில் மோசமாகவே இருப்பதாகவும், இதனால் அந்த நாடுகளில் மில்லியன்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நடத்தபட்ட சில ஆய்வுகளில், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளுக்கு வெளிப்பாடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காங்க்ராவை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் தொற்றுநோயியல் நிபுணரும், கட்டுரையின் ஆசிரியருமான பர்வீன் குமார்  ஆகியோரும்,  இதே போன்ற கட்டுரையை ”கொரோனா உயிரிழப்புகளில் மைக்ரோபோனின் பங்கு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

மோசமான சுகாதரம் உள்ள பகுதியில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது. இந்த செயல் முறைகள் நோய்எதிர்ப்பு பயிற்சி என்று அழைக்கப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பல தகவல்கள் இன்னும் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோயெதிர்ப்பு நிபுணர் டிப்யமன் கங்குலி தெரிவிக்கையில், பயிற்சி அளிக்கப்பட்ட நோய்எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்வதே, இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும். இது ஓரளவிற்கு, சுகாதார குறித்த ஆய்வுக்ளுடன் தொடர்புடையது  என்று கூறினார்.

இந்த தரவுகள் சுற்றுச்சுழலில் உள்ள கிருமிகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என்றும்,  குறிப்பாக வழக்கமாக வெப்பமண்டல காலநிலையை கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்த அவர்,  நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை  ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் சிறப்பாக தயார் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மூத்த உயிரியலாளரும் ஜாமியா ஹம்டார்ட் துணைவேந்தருமான சையத் ஹஸ்னைன் தெரிவிக்கையில், கொரோனா காரணமாக பயிற்சியளிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, சுகாதாரக் கருத்துகள் மற்றும் குறைந்த இறப்பு விகிதம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை  உறுதிப்படுத்த முடியாது என்றார்.

SARS CoV 2 போன்ற புதிய வைரஸுக்கு நம் உடல்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதற்கான நோய்க்கிருமிகளின் எண்ணிக்கையை வெளிப்படுத்துவதற்கும், BCG தடுப்பூசி செய்வதற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.