இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது.
சில தினங்களுக்கு முன்பு ஃபெப்சி அமைப்பு தமிழக அரசுக்கு இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு மட்டும் அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனைப் பரிசிலீத்த தமிழக அரசுஅனுமதியளித்தது.
அதன்படி இந்தியன் 2′ படத்தின் எடிட்டிங் பணிகள் 2 இடங்களில் நடைபெற்று வருகின்றன. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. ‘ராங்கி’ படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள், ‘கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் சின்னத்திரை தொடர்களின் டப்பிங் பணிகள் ஆகியவை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் அனைத்துமே கொரோன அச்சுறுத்தலால் சமூக இடைவெளியுடன் 5 நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.