புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கிறது. தொற்றுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

இந் நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளையும் ஒத்தி வைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீண்டும் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் வெளியாகும் என்றும் கூறி உள்ளது.