சென்னை:

புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர் களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து  திருவண்ணாமலைக்கு நாளை மாலை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை கடற்கரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 20) மாலை 6 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டு அன்று இரவு 9.25 மணிக்கு வேலூரை சென்றடையும். அதன்பிறகு, இந்த ரயில் பயணிகள் சிறப்பு ரயிலாக திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் செல்லும்.

இந்த ரயில் வேலூர் கன்டோன்மென்டில் இருந்து அன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை இரவு 11.25 மணிக்கு சென்றடையும். 

மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து திங்கள்கிழமை (ஜன.21) அதிகாலை 4 மணிக்கு இந்த சிறப்பு ரயில் புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்டை அதிகாலை 5.55 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து, வேலூரில் இருந்து காலை 6 மணிக்கு மின்சார ரயிலாக புறப்பட்டு, சென்னை கடற்கரையை காலை 9.30 மணிக்கு வந்தடையும்.

இவ்வாறு தென்னகே ரயில்வே தெரிவித்து உள்ளது.