கூடங்குளத்தில் உள்ள 2வது அணு உலையில் பழுது ஏற்பட்டுள்ளதன் காரணமாக, மின் உற்பத்தி திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு அலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலையில் அவ்வப்போது மின் அலகுகளில் பழுது ஏற்படுவது வாடிக்கை. இதனால் மின்சார உற்பத்தி சில காலம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கும். தற்போது 2வது அணு உலையின் டர்பைனில் இன்று காலை திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அணு உலை அதிகாரிகள், டர்பைனில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய ஓரீரு நாள் ஆகும் என்பதால், அதுவரை மின்சார உற்பத்தி செய்யப்படமாட்டாது என்று தெரிவித்தனர்.