சென்னை

சென்னை நகரின் பல இடங்களில் மழை பெய்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது..

மாதிரி புகைப்படம்

நேற்று வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை புதுக்கோட்டை, தஞ்சை திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யும் என அறிவித்து இருந்தது.  சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

இன்று காலையில் இருந்தே சென்னையில் வானம் மேக மூட்டமாகக் காணப்பட்டு வந்தது. மாலை சுமார் 3.30 மணி முதல் இருள் சூழ்ந்து இரவு போலத் தென்பட்டது.  இன்று மாலை சுமார் 4 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய மழை நகரின் பல இடங்களில் பெய்துள்ளது.    அத்துடன் புறநகர்ப் பகுதிகளான திருமுல்லைவாயில்,  ஆவடி, பட்டாபிராம், ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.

பொது மக்கள் இந்த மழையை வீட்டில் இருந்த படியே ரசித்துள்ளனர்.  ஒரு சிலர் மட்டும் மொட்டை மாடிகளுக்குச் சென்று மழையை வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளனர்.  நகரில் அம்பத்தூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு சிறிது நேரத்துக்கு முன்பு மீண்டும்  மின் விநியோகம் தொடங்கி உள்ளது.