2017-ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்ற பெயரில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோக்கள் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது .

இதனைத் தொடர்ந்து சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.சுசித்ரா – கார்த்திக் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.

அதன் பின் சுசித்ரா அவரது தங்கை வீட்டில் தங்கியிருந்தவர் நவம்பர் 11-ம் தேதி முதல் காணவில்லையென அடையாறு காவல் நிலையத்தில் சுசித்ராவின் தங்கை சுஜிதா புகார் கொடுத்தார்.விசாரணையில் அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது .

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார் சுசித்ரா. எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட நான் பார்க்கவில்லை. அதில் தனுஷ், அனிருத்தை தேவையில்லாமல் இழுத்துவிட்டனர். அது மார்பிங் வீடியோவா என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.அதை யார் செய்தார்கள் என்பது போகப் போகத் தெரிய வரலாம்.என கூறியுள்ளார் .