‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீலின் அடுத்த படத்தை ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘சலார்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் – பிரபாஸ் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிடவுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ்.

https://www.instagram.com/p/CISfu-uJ6Rk/