தென்னாடு போற்றும் சிவனே போற்றி…. எந்நாட்டவர்க்கும் இறைவாக போற்றி….

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.

நித்திய பிரதோஷம்: தினமும்  சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய பிரதோஷமாகும்.

திவ்ய பிரதோஷம்:  பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.

தீப பிரதோஷம்: (மகா பிரதோஷம்)  தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.

சப்தரிஷி பிரதோஷம்:  பிரதோஷ காலத்தில் பூஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ஏகாட்ச்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.

அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

திரிகரண பிரதோஷம்:  வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.

பிரம்ம பிரதோஷம்: இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.

ஆட்சரப பிரதோஷம்: வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.

கந்த பிரதோஷம்:  சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.

சட்ஜ பிரபா பிரதோஷம்: வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.

அஷ்டதிக் பிரதோஷம்: வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.

நவகிரக பிரதோஷம்: வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷ மாகும்.

துத்த பிரதோஷம் : வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.

பிரதோஷ நாட்களில் என்ன கிழமை வழிபாடு செய்தால்,  என்னனென்ன பலன்கள் கிடைக்கும்….

ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்

திங்கள், சோம பிரதோஷம் – நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்

செவ்வாய்ப்பிரதோஷம் – பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்

புதன் பிரதோஷம் – நல்ல புத்திரபாக்யம் தரும்

வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்

வெள்ளி பிரதோஷம் – எதிரிகள், எதிர்ப்பு விலகும்

சனிப்பிரதோஷம் – அனைத்து துன்பமும் விலகும்

உங்களின் பிரதான தோஷங்கள் நீக்கி பிரகாசமான வாழ்வை பெறுங்கள்….!

தென்னாடு போற்றும் சிவனே போற்றி…. எந்நாட்டவர்க்கும் இறைவாக போற்றி….