புதுடெல்லி:

விமானத் துறையில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் விசாரணை நடத்தியது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் பட்டேல் விமான இருக்கை ஒதுக்கீட்டில் பல கோடி முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட பிரஃபுல் பட்டேல், தொடர்ந்து 8 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். மீண்டும் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டுள்ளார்.

விமான இருக்கை ஒதுக்கீட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் தீபக் தல்வார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.