டெல்லி: உடல்நிலை பாதிப்பு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலைமேலும் மோசமடைந்தது உள்ளதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட நிலையில், அவர்து உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து,  வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி  டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார். ஆனால்,  அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து இருப்பதாக  ராணுவ மருத்துவமனை தரப்பில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகரித்திருப்பதால் அவரது உடல்நிலை மேலும்  கவலைக்கிடமாக இருப்பதாகவும்,  வென்டிலேட்டர் உதவியால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.