டெல்லி: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: என் அன்பு நாட்டு மக்களே, நம் அனைவருக்கும் இது மிகவும் சிக்கலான காலம். நம்முடைய குடும்பத்தினர், நண்பர்கள், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.

எனவே, கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எச்சரிக்கையுடனும், இரக்கத்துடனும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா போரில் வெற்றி பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார்.