டில்லி

ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில ஆளுநர்கள் நியமனம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதி மாலிகை வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு

”இந்திய ஜனாதிபதி ஒரு சில பணி நியமனமும், மாற்றமும் குறித்து இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்.

1. தற்போது இமாசலப் பிரதேச ஆளுநராக உள்ள கல்ராஜ் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டு ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

2. பகத் சிங் கோஷ்யாரி மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

3. பண்டாரு தத்தாத்ரேயா இமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்படுகிறார்,

4. கேரள மாநில ஆளுநராக ஆரிஃப் முகமது கான் நியமிக்கப்படுகிறார்.

5. தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

இந்த நியமனம் அவர்கள் பணி ஏற்ற தினத்தில் இருந்து அமுலுக்கு வருகிறது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.