டில்லி

நாளை டில்லியில் நடைபெற உள்ள விழாவில் 112 சாதனைப் பெண்களை ஜனாதிபதி பாராட்டி கவுரவிக்கிறார்

டில்லியில் நாளை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு பாராட்டு விழா ஒன்று நடை பெர உள்ளது.  இந்த விழாவில் ஆட்டோ ஓட்டுனரிலிருந்து விண்வெளி வீராங்கனைகள் உட்பட பலரும் பங்கேற்க உள்ளனர்.

பலவேறு துறைகளில் சாதனை புரிந்த  பெண்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விழாவில் கவுரவப்படுத்த உள்ளார்.   சுடுகாட்டில் பணி புரிந்த பிரவீனா சாலமன்,  பி வி சிந்து,  பின்னணி பாடகி சித்ரா உட்பட 112 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்