டெல்லி:

த்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்கா நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தலைமை தகவல்ஆணையராக இருந்து வந்த  சுதிர் பார்கவா ஓய்வுக்குப் பிறகு மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. சமீபத்தில், பிரதமர் மோடி தலைமையிலான குழு கூடி,  முன்னாள் தகவல் ஒளிபரப்புத்துறை செயலரான பிமல் ஜூல்காவை ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்து அறிவித்தது.

இதையடுத்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில்,  மத்திய தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்காவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர்.