டில்லி:

மும்பை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் இறந்தனர். 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.