டில்லி:

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது.

இதில், இளையராஜா உட்பட 3 பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட 9 பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.