டெல்லி: 3 நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை  தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர் காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு சென்று தங்குகிறார். 10ம் தேதி காலை கவா்னா் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் சென்று, அங்குள்ள பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலையில் வேலூரில் இருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் சென்னை வந்து கவா்னா் மாளிகை சென்று தங்குகிறார்.

11ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டுவிட்டு, அன்றைய தினம் பிற்பகலில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனா்.

சென்னை பழைய விமான நிலையத்தில் குடியரசு தலைவரின் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டா் வந்து இறங்கும் பகுதிகளில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்தனா். தொடர்ந்து சென்னை பழைய விமான நிலையத்தில் 3 நாள் பயணத்தின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.