டில்லி,

பாரதியஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழு இன்று தலைவர் அமித்ஷா தலைமையில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்காக பா.ஜ.கவை சேர்ந்த  எம்பி-க்கள், முக்கிய நிர்வாகிகளை டில்லிகட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதியை  தேர்ந்தெடுக்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து, பாரதியஜனதா அறிவிக்கும் வேட்பாளரை எதிர்த்து  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் வேட்பாளரை நிறுத்த முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரதியஜனதா கட்சியின் சார்பில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

ஏற்கனவே,  வருகிற 23 ம் தேதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை  அறிவிக்கவுள்ளதாக வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.