நடிகர் அஜித் சமூக வலதளத்தில் இணைவது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தான் சமூக வலதளங்களில் இணையவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் அஜித் குமார்.

சமீபத்தில் ஒரு போலி அறிக்கை ஒன்று அஜித் பெயரில் வெளியானது .பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையானது போலி அறிக்கை என குறித்து நடிகர் அஜித் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.