டெல்லி:
கொரோனா தொற்று குறித்து இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்திய பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தொற்று குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று சில மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்றும் தமிழக முதல்வர் உள்பட கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதும் லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் வீர மரணத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம். வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது’’ என்று கூறினார்.