கொல்கத்தா: நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவ பிரதமர்  மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் மமதா பேசியதாவது: நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா தொற்று  இருக்கிறது.

கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? இதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்.

கொரோனா 2ம் அலை பரவ மோடியே காரணம். தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டிருந்தால், தற்போது 2ம் முறையாக கொரோனா பரவும் நிலை ஏற்பட்டு இருக்காது என்று கூறினார்.