டில்லி:

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு நாடுகளின் நல்லுறவு குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அரசி மேக்ஸிமா இன்று மாலை டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக் துணை தலைவரையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்த அரசி மேக்ஸிமா திட்டமிட்டுள்ளார்.