டெல்லி:

கொரோனா குறித்து, மாவட்ட முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்துவத்துறை நிபுணர்கள் என பல்வேறு தரப்பினருடன் உரையாடி வரும் பிரதமர் மோடி, தற்போது அரசியல் கட்சித் தலைவர்களுடனும் உரையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஏப்ரல் 8ந்தேதி காணொளி காட்சி மூலம் 5க்கும் மேற்பட்ட பாராளுமன்ற எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அரசியல் கட்சிகளின்  தலைவர்களுடன் (நாடாளுமன்றத்தில் 5 க்கும் மேற்பட்ட எம்.பி.க்களைக் கொண்டவர்கள்) உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.